லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியை 296 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தது ஆஸ்திரேலியா.
முன்னதாக, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ஓட்டங்களைக் குவித்து 173 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. 3வது நாள் ஆட்ட முடிவில் 296 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா நேற்று தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி இருப்பதால் அதற்கான வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்திய வீரர் ஷர்துல் தாக்குர் அரைசதம் அடித்ததன் மூலம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஓவல் மைதானத்தில் வெளிநாட்டு வீரர் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் அடித்துள்ள பட்டியலில் இணைந்ததே அவரது சாதனை. ரஹானேவுடன் இணை சேர்ந்த ஷர்துல் தாக்குர் இந்தியாவை ‘ஃபாலோ ஆன்’ ஆவதிலிருந்து காப்பாற்றினார். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர்.
இந்நிலையில், இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மாவை முன்னாள் அணித் தலைவர் சவுரவ் கங்குலி விமர்சித்துள்ளார். அஸ்வின் போன்ற வெற்றியாளரை இடம்பெறச் செய்யாமல் இந்திய அணி தவறு செய்துவிட்டதாக அவர் சாடியுள்ளார்.