கமாண்டோ சீருடையில் தாக்குதல்: கலவர கும்பலுக்கு மணிப்பூர் காவல்துறை எச்சரிக்கை

இம்பால்: மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்துறை கமாண்டோக்களின் சீருடைகள், ஆயுதங்கள் திருடுபோயின. இந்நிலையில் கலவரக்காரர்கள் சிலர் திருடப்பட்ட கமாண்டோக்களின் சீருடையை அணிந்து வன்முறையில் ஈடுபடுவது வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதனால் கமாண்டோக்களின் கருப்பு நிறச் சீருடையை மக்கள் யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என மணிப்பூர் காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி கமாண்டோ சீருடையில் செல்பவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி பரிசோதிக்கும்படி பாதுகாப்புப் படையினருக்கு மணிப்பூர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கலவரக் கும்பல் கமாண்டோ சீருடையில் வன்முறையில் ஈடுபடுவதால், பாதுகாப்புப் படையினர் பாரபட்சமாக செயல்படுவதாக மணிப்பூர் மக்கள் தவறாக நினைக்கின்றனர்.

கலவரத்தின் போது காவல்துறையினரின் ஆயுதங்கள் காணாமல் போனது பற்றி தற்போது கணக்கெடுப்புப் பணி நடந்து வருகிறது. அவற்றை மீட்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கலவரத்துக்குப் பின் மணிப்பூர் காவல்துறை படையில் 1,200 பேரை காணவில்லை. அவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்று டிஜிபி ராஜீவ் சிங் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!