ஆசியக் கிண்ணம்: இந்திய அணியில் ராகுல், ஷ்ரேயாஸ்

புதுடெல்லி: ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 17 பேர் கொண்ட அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். கே எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் காயத்திலிருந்து மீண்டு, அணிக்குத் திரும்பியுள்ளனர். சஞ்சு சாம்சன் தயார்நிலை வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான், நேப்பாளம், பங்ளாதேஷ், இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் என மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இப்போட்டி, ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி நிறைவுபெறுகிறது.

பாகிஸ்தானில் நான்கு போட்டிகளும் இலங்கையில் ஒன்பது போட்டிகளுமாக இப்போட்டித் தொடர் நடத்தப்படுகிறது.

இதனிடையே, அயர்லாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய அணி 33 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (தலைவர்), ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், முகம்மது ஷமி, இஷான் கிஷன், ஷார்துல் தாக்குர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!