ஆசிய விளையாட்டு: கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு தங்கம்

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டில் இடம்பெற்ற ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

பூவா தலையாவில் வெற்றிபெற்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணியை ஆப்கானிஸ்தான் அணியால் சமாளிக்க முடியவில்லை.

18.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மழை ஓயாததால், தரவரிசையில் இந்திய அணி முன்னிலை பெற்றதை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் பங்ளாதே‌ஷ் அணியும் மோதின. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால் 5 ஓவர் ஆட்டமாக மாற்றப்பட்டது.

முதலில் பந்தடித்த பங்ளாதே‌ஷ் 65 ஓட்டங்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியால் 48 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. சிறப்பாக விளையாடிய பங்ளாதே‌ஷ் அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

முன்னதாக, மகளிர் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியப் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!