லக்னோ: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 10ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகின்றன.
ஆட்டம் லக்னோவில் உள்ள விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்குத் தொடங்குகிறது.
உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது தென்னாப்பிரிக்க அணி.
குறிப்பாக அதன் பந்தடிப்பாளர்கள் நன்றாக ஓட்டம் குவித்து வருகின்றனர். பந்துவீச்சு சற்று சுமாராக இருந்தாலும் பந்தடிப்பாளர்கள் அதிக ஓட்டங்கள் எடுப்பதால் வெற்றிபெறுகின்றனர்.
மறுபக்கம், ஆஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத் தொடரைத் தோல்வியுடன் தொடங்கியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியப் பந்தடிப்பாளர்கள் திணறினர். அதனால் அவ்வணி 199 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
லக்னோ ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப் பெரும் சோதனையாக இருக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.