புதுடெல்லி: இந்தியன் பிரிமியர் லீக்கில் (ஐபிஎல்) ஹார்திக் பாண்டியாவின் தலைமையின்கீழ் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி தடுமாறினாலும், ரசிகர்கள் அவரின் புகழை மீண்டும் பாடுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என அந்த அணியின் பந்தடிப்புப் பயிற்சியாளர் கீரோன் பொல்லார்ட் கூறியுள்ளார்.
2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் பருவத்திலேயே ஐபிஎல் கிண்ணத்தை வெல்வதற்கு வித்திட்ட பாண்டியா, 30, இந்தப் பருவம் மும்பை அணிக்கு மாறினார். மேலும், ரோகித் சர்மாவிடம் இருந்து அணித்தலைவர் பொறுப்பையும் அவர் ஏற்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 105 ஓட்டங்களை எடுத்த ரோகித், ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும், மும்பை அணி விளையாடிய ஆறு ஆட்டங்களில் நான்காவது முறையாக தோல்வியைச் சந்தித்தது. லீக் பட்டியலில் எட்டாவது இடத்துக்கு அது சரிந்தது.