லண்டன்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
செல்சிக்கு எதிரான அரையிறுதியாட்டத்தில் சிட்டி, 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. சனிக்கிழமையன்று (ஏப்ரல் 20) நடைபெற்ற அந்த ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் வெற்றி கோலைப் போட்டார் சிட்டியின் பெர்னார்டோ சில்வா.
ஆட்டத்தில் பல வேளைகளில் செல்சிதான் மேலும் சிறப்பாக விளையாடியது. ஆனால் அக்குழு பல கோல் வாய்ப்புகளைத் தவறவிட்டது சிட்டிக்கு சாதகமாக அமைந்தது.