சென்னை: கஞ்சா போதையில் வழிப்பறி செய்த சிறார்கள்

சென்னை: சிறார்கள் இடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் வெள்ளிக்கிழமை கஞ்சா போதையில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உள்பட ஏழு பேர் கல்லூரி மாணவர்களை வழிப்பறி செய்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒரு தனது நண்பர்களுக்கு மது, கஞ்சாவுடன் பிறந்தநாள் விருந்து கொடுத்துள்ளார்.

இவர்கள் அதேபகுதியில் உள்ள திடலில் போதையில் மயங்கியிருந்த போது ஏழு சிறுவர்கள் அங்கு வந்து கஞ்சா புகைத்துள்ளனர்.

கல்லூரி மாணவர்கள் சிறுவர்களுக்கும் மது அளித்தனர். இந்நிலையில் போதை இறங்கியதும் அந்த சிறுவர்கள் கஞ்சா தருமாறு கேட்க, கல்லூரி மாணவர்கள் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடிக்க, சிறார்கள் திடீரென தங்களிடம் இருந்த கத்தியைக் காட்டி மிரட்டி, கல்லூரி மாணவர்களிடம் இருந்த தங்கச் சங்கிலி, கைக்கடிகாரம், ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் ஏழு சிறுவர்களையும் பிடித்துள்ளனர். அவர்களில் ஒரு சிறுவன் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் என்றும் மற்றொருவர் தொழில் பயிற்சி மையத்தில் படித்து வரும் மாணவன் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில் காவல்துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!