பெண்ணை ‘ஆன்டி’ என அழைத்தவர்மீது வழக்கு

சென்னை: பெண் பயணியை ‘ஆன்டி’ என்று அழைத்த மாநகரப் பேருந்து நடத்துநா்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நிா்மலா தேவி என்பவர் அண்மையில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்தார். அவரிடம் பேருந்து நடத்துநா் காா்த்திக் ‘எங்க போறீங்க ஆன்டி’ என்று கேட்டார். அதற்கு, எப்படித் தன்னை ‘ஆன்டி’ என்று அழைக்கலாமென நிர்மலா ஆட்சேபம் தெரிவித்தார்.

ஆனாலும் விடாத கார்த்திக், மீண்டும் சக பயணிகள் முன்னிலையில் நிர்மலாவை ‘ஆன்டி’ என்று அழைத்தார். இதனால் அதிருப்தி அடைந்த அப்பெண், பேருந்திலுள்ள பெண்கள் உதவிக்கான அவசரகாலப் பொத்தானை அழுத்தியதுடன், தன் கணவருக்கும் தகவல் தெரிவித்தார்.

பின்னர் சக பயணிகளுக்கு முன்னிலையில் தன்னை அவமரியாதையாகப் பேசியதாகக் கூறி, கார்த்திக்மீது காவல் நிலையத்திலும் புகாா் செய்தார். அதனைத் தொடர்ந்து, காா்த்திக் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அவரைக் கைதுசெய்யாதபோதும் அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!