இளையராஜா மகள் பவதாரிணி காலமானார்; திரையுலகத்தினர் அதிர்ச்சி

சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி காலமானார். அவருக்கு வயது 47.

அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கடந்த ஐந்து மாதங்களாக அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

‘பாரதி’ திரைப்படத்தில் தந்தை இளையராஜா இசையில் பவதாரிணி பாடிய ‘மயில் போல’ என்ற பாடலுக்காக அவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

பின்னணிப் பாடகியாகப் பெயர் வாங்கிய பவதாரிணி சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.

பவதாரிணியின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சனிக்கிழமை நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவும் தற்போது இலங்கையில் உள்ளார் என தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!