மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 2023ஆம் ஆண்டில் 75,000 வழக்குகளுக்குத் தீர்வு: தலைமை நீதிபதி பெருமிதம்

மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 75,000 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமை நீதிபதி கங்கபூர்வாலாவுக்கு வியாழக்கிழமை பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மீது மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நம்பிக்கை காரணமாக மதுரை கிளையில் தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

“கடந்த 2023ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 71,000 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. அதே காலகட்டத்தில் 75,000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

“உயர் நீதிமன்ற அமர்வு மதுரையில் அமைக்கப்பட்டிருக்காவிட்டால் இங்கு தாக்கலாகும் 50% வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்று இருக்கும். அவ்வாறு நிகழ்ந்து இருந்தால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்,” என்று தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!