இளையர் முரசு

காதல் ஒருவரின் மனத்தில் விண்மீனைப்போல ஒளியூட்டும் சக்தி கொண்டது என்ற கருப்பொருளுடன் ஷபீர் சுல்தானின் புதிய பாடலொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம், கலை, பண்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கல்யாணி அழகப்பன், 22, தன் சிறுவயது நாட்டத்தை சீரிய முறையில் செயலாக்கிவருகிறார்.
சிறுவயதில் பள்ளி சென்று வீடு திரும்பும்போதெல்லாம் சக மாணவர்கள் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக 28 வயது ஷாம் ராஜ் இளஞ்சேரன் கூறினார். அந்த வயதில் சிறிய உருவம் கொண்டவராக அவர் இருந்தார். வீட்டிலும் குறும்புக்காரன் என்று பெயர் எடுத்த ஷாம், தன்னை ஒருமுறை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அடித்த கொடுமையான சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.
‘ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?’ என்ற வினாவிற்கு விடைகாணும் முயற்சியில், தமிழக வரலாற்று ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளனர் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்கள்.
சிறப்புத் தேவையுடையோர் மேலும் எளிதில் வேலை செய்வதற்குத் தொழில்நுட்பம்வழி ஆதரவு தரும் நோக்கில், இளையர்கள் சிலர் புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்கியுள்ளனர்.