சிங்க‌ப்பூர்

அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் மாதத்தை முன்னிட்டு, ஒன்றிணைந்த சிங்கப்பூர் எனும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆண்டிறுதிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் யூனோஸ் வட்டாரத்தைச் சுற்றியுள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அக்கம்பக்கத்தினர் இணைந்து பங்குபெறும் கொண்டாட்டம் என்றாலே மதியிறுக்க மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றும் சாந்தா ராமனுக்கு, 53, பூரிப்பு.
மக்கள் கழக அடித்தள அமைப்புகளின் ஏற்பாட்டில், புத்தாண்டை வரவேற்க சிங்கப்பூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
கிட்டத்தட்ட ஈராண்டுகளில் முதல்முறையாக செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் மத்தியப் பகுதி கிறிஸ்துமசுக்கு முந்திய இரவு வழிபாட்டுச் சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
மரினா பே வட்டாரத்தில் புத்தாண்டை வரவேற்க டிசம்பர் 31ஆம் தேதி மாலை திரண்டு சென்ற கூட்டம் சிங்கப்பூர் முழுவதும் அப்போது பெய்த மழையைப் பொருட்படுத்தவில்லை.