சிங்க‌ப்பூர்

பிற்பகல் 2.30 மணிக்கு வேலையைத் தொடங்கிய டாக்சி ஓட்டுநர் ஒருவர் அடுத்த நாள் அதிகாலை 2 மணி வரை டாக்சி ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தூக்கக் கலக்கத்தில் சாலைப் பணிகளை மேற்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மீது மோதினார்.
சிங்கப்பூரில் இறுதிச் சடங்கு நடத்தும் இடங்களுக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், புதிய இறுதிச் சடங்குக் கூடத்தையும் அஸ்திமாடத்தையும் உள்ளடக்கிய வளாகத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிடுகிறது.
தம்முடைய 25வது வயதில் உணவங்காடித் தொழிலில் அடியெடுத்து வைத்தார் சுரேந்திரன். இவருக்குத் தொழில் நுணுக்கங்களைச் சொல்லித் தந்தவர் இவருடைய தாயார் திருவாட்டி முத்துலட்சுமி, 62.
கட்டுமானத் துறை, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் ஏறத்தாழ 14,000 பேர் வசிக்கும் எஸ்11-பிபிடி தங்குவிடுதி 1Bயில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தை முன்னிட்டு கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோருக்கு நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக உதவி தேவைப்பட்டால் சட்ட அமைச்சின்கீழ் செயல்படும் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் உதவுகிறது. இந்த அலுவலகத்தால் பிரதிநிதிக்கப்பட்டால் கட்சிக்காரர்கள் பலனடைவார்களா என்று முதலில் ஆராயப்படும்.