இந்தியா

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் சித்தி பேட்டை புருகுபள்ளி வட்டாரத்தில் முப்பரிமாண அச்சிடல் முறையில் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளனர். உலகிலேயே இந்த முறையில் கட்டப்பட்டுள்ள முதல் கோயில் இது.
புதுடெல்லி: ஹரியானாவின் குருகிராமில் நில உரிமையாளர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் கூறியதாவது:
உத்தரகாசி: உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் 51 மீட்டர் தூரத்துக்கு பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டு, மீட்புப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஊழியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அவர்களை வரவேற்கவும், தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை வழங்கவும் அதிகாரிகள், மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
புதுடெல்லி: விமானங்களைத் தாமதமாக இயக்குதல், சேவைகள் ரத்துச் செய்யப்படுதல், பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுப்பது, பயன்படுத்த முடியாத இருக்கைகளில் பயணம் செய்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காதிருத்தல் என ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது பயணிகள் பலர் புகார் கூறியுள்ளனர்.