காதல் திருமணம்: மகன், மருமகள், தாய்க்கு வெட்டு; இருவர் மரணம்

ஆணவக் கொலை செய்தவர் தப்பி ஓட்டம்

வேறு சா­திப் பெண்ணை காதல் திரு­மணம் செய்­த­தற்­காக கிருஷ்­ண­கி­ரி­யில் இரண்டு கொலை­கள் நிகழ்ந்­துள்­ளன. காதல் மணம் புரிந்த பெண் உயிர் பிழைக்­கப் போராடுகிறார்.

இந்த ஆண­வக் கொலைகள் தொடர்பாக கிருஷ்­ண­கிரி மாவட்­டம் ஊத்­தங்­கரையை அடுத்­துள்ள அரு­ண­பதி கிரா­மத்­தைச் சேர்ந்த தண்­ட­பாணி, 48, என்­ப­வரை காவல்­துறை தேடி வரு­கிறது. இவ­ரது மகன் சுபாஷ், 25, திருப்­பூ­ரில் ஒரு பனி­யன் தயா­ரிப்­புத் தொழிற்­சா­லை­யில் வேலை செய்­தார்.

அப்­போது தம்­மு­டன் வேலை செய்த அனு­சுயா, 23, என்­ப­வரை அவர் காதலித்து வந்­துள்­ளார். அந்­தப் பெண் தாழ்த்­தப்­பட்ட வகுப்­பைச் சேர்ந்­த­வர் என்று கூறப்­ப­டு­கிறது. இரு­வ­ரும் கடந்த (மார்ச்) மாதம் 27ஆம் தேதி ரக­சியத் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­னர்.

இந்­நி­லை­யில், தமிழ்ப் புத்­தாண்­டைக் கொண்­டாட தண்­ட­பா­ணி­யின் தாயார் கண்­ணம்­மாள், 65, புது­ம­ணத் தம்­ப­தி­யரை அரு­ண­பதி கிரா­மத்­திற்கு அழைத்­தி­ருந்­தார். மகிழ்ச்­சி­யு­டன் பாட்டி வீட்­டுக்குச் சென்ற சுபா­ஷும் அவ­ரது மனை­வி­யும் புத்­தாண்­டைக் கொண்­டா­டிய பின்­னர் அங்­கேயே தங்­கி­விட்­ட­னர்.

சம்­ப­வத்­தைக் கேள்­விப்­பட்டு ஆத்­தி­ர­ம­டைந்த தண்­ட­பாணி, நேற்­று அதிகாலை தமது அம்­மா­வின் வீட்­டுக்­குச் சென்று மகன் சுபா­ஷை­யும் அவ­ரது மனைவி அனு­சு­யா­வை­யும் சர­மா­ரி­யாக வெட்­டி­னார். தாக்குதலைத் தடுக்­க முயன்ற கண்­ணம்­மா­ளை­யும் தாய் என்­றும் பாராது கண்­மூ­டித்­த­ன­மாக வெட்­டி­னார். பின்­னர் அவர் தப்பி ஓடி­விட்­டார்.

அல­றல் சத்­தம் கேட்டு அக்­கம்­பக்­கத்­தி­னர் ஓடி­வந்­த­னர். ரத்­த­வெள்­ளத்­தில் கிடந்த மூவ­ரை­யும் ஊத்­தங்­கரை அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர்.

ஆனால், சுபா­ஷும் கண்­ணம்­மா­ளும் ஏற்­கெ­னவே இறந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்­கள் கூறி­னர். படு­கா­ய­ம­டைந்த அனு­சு­யா­வுக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்த விவ­ரங்­களை சேலம் வட்­டார காவல்­துறை தலைமை அதி­காரி எஸ் ராஜேஸ்­வரி, ‘டைம்ஸ் ஆஃப் இந்­தி­யா’­வி­டம் கூறி­னார். ஊத்­தங்­கரை கீழ்நீதி­மன்ற நீதி­பதி ஜி. அமர் ஆனந்த், நேற்று பிற்­ப­கல் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று அனு­சு­யா­வின் வாக்­கு­மூ­லத்­தைப் பதிவு செய்­தார். கொடூ­ரக் கொலைச் சம்­ப­வத்­தால் பதற்­றத்­தில் உறைந்­துள்ள அரு­ண­பதி கிரா­மத்­தில் காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!