மலேசியாவின் ஆறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
வரும் ஜூலை மாதம் இத்தேர்தலை எதிர்பார்க்கலாம் என்று எதிர்க்கட்சியான பாஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
மூன்று மாநிலங்களில் ஆட்சி நடத்தும் பாஸ் கட்சியின் துணைத் தலைவரும் கிளந்தான் மாநில துணை முதல்வருமான முஹமட் அமர் நிக் அப்துல்லா, ஆறு மாநிலங்களில் சட்டமன்றத்தைக் கலைக்கும் பணி ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
ஆறு மாநில அரசாங்கங் களுக்கு இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் இது இடம்பெறுவதாகவும் அவர் சொன்னார்.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு. கிளந்தான், திரெங்கானு, கெடா ஆகிய ஆறு மாநிங்களும் இவ்வாண்டு இரண்டாவது பாதியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்குகின்றன.
கிளந்தான், திரெங்கானு, கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் பாஸ் கட்சி தலைமை யிலான ஆட்சி நடைபெறுகிறது.
மலேசியாவின் முன்னணி எதிர்க்கட்சி கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலிலும் அக்கட்சி முக்கிய அங்கம் வகிக்கிறது.
இதர மூன்று மாநிலங்களில் பிரதமர் அன்வார் தலைமையில் செயல்படும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி நடத்துகிறது.
“கிளந்தான் மாநில அரசாங்கம் ஏற்கெனவே ஜூன் மாதத்தில் சட்டமன்றத்தைக் கலைக்க முடிவு செய்துள்ளது,” என்று திரு அமர் ஞாயிறன்று தெரிவித்தார்்.
கிளந்தான் முதல்வர் அஹமட் யாக்கோப் அளித்த நோன்புப் பெருநாள் விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் பேசினார்.
ஆறு மாநில முதல்வர்களும் ஒன்றாகச் சந்தித்தபோது தேர்தல் குறித்து புரிந்துணர்வு எட்டப்பட்ட தாக கடந்த பிப்ரவரியில் கூறிய சிலாங்கூர் முதல்வர் அமிருதீன் ஷாரி, ஜூன் இறுதியில் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான நட வடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என்றார்.
சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அறுபது நாள்கள் அவகாசம் உள்ளது.
ஆனால் அரசாங்கம் கலைக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே ஆணையம் தேர்தலை நடத்தி வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது மூன்று மாநிலங்கள் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்தன.
இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் கெ அடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், நீண்டகால எதிர்க்கூட்டணியான தேசிய முன்னணியுடன் சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளார்.