சைனடா டவுன் நகைக் கடையில் இரண்டு தங்கச் சங்கிலிகளைத் திருடியதாக நம்பப்படும் 14 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
அவற்றின் மதிப்பு $23,000. சென்ற ஞாயிற்றுக்கிமை நடந்த சம்பவத்தில் கடைக்காரர் திரும்பிய சில நொடிகளில் சிறுவன் நகைகளை எடுத்துக்கொண்டு ஓடியதாகக் கூறப்படுகிறது.
ஞாயிறு மாலை 5.30 மணியளவில் முகக்கவசம் அணிந்து வந்த அச்சிறுவன், சைனா டவு னில் உள்ள சுங் ஹுவா ஜேட் அண்ட் ஜூவல்லரி நகைக் கடைக்குச் சென்று தங்கச் சங்கிலிகளை காட்டுமாறு கேட்டு உள்ளான்.
அப்போது தனது சகோதரருடன் சேர்ந்து குடும்ப நகைக் கடையை நடத்தும் திரு டெங் வெய் சியோங், 45, சிறுவனுக்கு இரண்டு தங்கச் சங்கிலிகளைக் காட்டினார். ஆனால் கனமான சங்கிலி யைக் காட்டுமாறு சிறுவன் கேட் டான்.
இதனால் கனமான இரண்டு தங்கச்சங்கிலிகளை சிறுவனுக்கு அவர் காட்டினார்.
பின்னர், முதலில் காட்டிய இரண்டு தங்கச் சங்கிலிகளை மீண்டும் பெட்டகத்தில் வைக்க திரு டெங் திரும்பிய சில நொடிகளில் சிறுவன் அவர் இரண்ட வதாகக் காட்டிய இரண்டு தங்கச் சங்கிலிகளை எடுத்துக் கொண்டு ஓடியதை கண் காணிப்புக் கேமரா காட்டியது. திரு டெங்கும் அவரது சகோதரர் டெங் வெய் ஸின்னும், 39, சிறுவனை துரத்திச் சென்று ஓடி ஒருவழியாக மடக்கிப் பிடித்தனர். சிறுவனை கடைக்கு அழைத்து வந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
பார்க் ரோட்டில் நடந்த இச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள், சிறுவனை அதே நாளில் கைது செய்தனர்.
சிறுவனுக்கு முதலில் காட்டிய இரண்டு தங்கச் சங்கிலிகளின் எடை 50 கிராம், 80 கிராம் என்றும் சிறுவன் பறித்துச் சென்ற இரண்டு சங்கிலிகள் 100 மற்றும் 130 கிராம் எடை கொண்டவை என்றும் திரு டெங் தெரிவித்தார்.
“முதலில் காட்டிய ஒரு ஜோடி தங்கச் சங்கிலிகளை மீண்டும் வைப்பதற்காக திரும்பினேன். அதற்குள் சிறுவன் நகைகளை எடுத்துக்கொண்டு ஓடியதுதான் தெரியும்,” என்று திரு டெங் சொன்னார். “நகைகள் திரும்பக் கிடைத்து விட்டதால் சிறுவனை நானும் எனது சகோதரரும் மன்னித்து விட்டோம். “அவர் இன்னமும் சிறு பையன்தான். தெரியாமல் தவறு செய்துவிட்டான்,” என்று திரு டெங் கூறி உள்ளார்.
காவல்துறை தொடர்ந்து இந்தச் சம்பவத்தை விசாரித்து வருகிறது.