மணல் திருட்டை எதிர்ப்பதால் மிரட்டல்: பயந்து பயந்து வாழும் பாலகிருஷ்ணன்

இந்­தி­யா­வின் தமிழ்­நாடு மாநி­லத்­தில் தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் உள்ள முறப்­ப­நாடு என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த பால­கி­ருஷ்­ணன் என்ற சிறு விவ­சாயி, நாள்­தோ­றும் பயந்து பயந்து வாழ்ந்து வரு­கி­றார்.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக அவருக்குத் துப்­பாக்கி ஏந்­திய காவல்­துறை அதி­காரி ஒரு­வர் 24 மணி நேர­மும் பாது­காப்பு அளித்து வரு­கி­றார்.

பால­கி­ருஷ்­ண­னுக்கு ஓர் ஏக்­கர் நிலம் இருக்­கிறது. ஆடு­க­ளை­யும் வளர்த்து வரு­கி­றார். தாமி­ர­ப­ரணி ஆற்­றில் மணல் கொள்ளை தலை­வி­ரித்­தா­டு­கிறது என்­றும் இரவு நேரங்­களில் தன்­னு­டைய கிரா­மம் உள்­ளிட்ட தாமி­ர­ப­ரணி வட்­டார கிரா­மங்­களில் கஞ்சா விற்­பனை கொடி­கட்­டிப் பறக்­கிறது என்­றும் கூறி 200க்கும் மேற்­பட்ட புகார்­களை அதி­கா­ரி­க­ளி­டம் பால­கிருஷ்­ணன் தாக்­கல் செய்து இருக்­கி­றார்.

ஆனால், இது­வ­ரை­யில் உருப்­ப­டி­யான எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று வல்­ல­நாடு ஊராட்சி மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் இருக்­கும் திரு பால­கி­ருஷ்­ணன் கூறு­கி­றார்.

காவல்­து­றை­யி­டம் தான் தெரி­விக்­கும் புகார்­ தகவல்கள் உட­னுக்­கு­டன் கடத்­தல்­கா­ரர்­களுக்­குச் சென்­று­வி­டு­வ­தாகக் கூறும் இவர், சட்­ட­வி­ரோத செயல்­களுக்குச் சில அதி­கா­ரி­களும் துணை போவ­தா­கக் கூறு­கி­றார்.

மணல் கொள்­ளை­யர்­க­ளுக்கு எதிராக புகார் தெரி­வித்­த­தால் ஏரா­ள­மான கொலை மிரட்­டல் தனக்கு வந்­த­தா­கக் கூறி மதுரை நீதி­மன்றத்­தில் பால­கி­ருஷ்­ணன் வழக்­குத் தொடுத்­தார்.

பால­கி­ருஷ்­ண­னுக்கு 24 மணி நேர­மும் துப்­பாக்கி ஏந்­திய காவல்­துறை அதி­காரி பாது­காப்பு கொடுக்க வேண்­டும் என்று கடந்த 2020ஆம் ஆண்டு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

“அது முதல் நான் அன்­றா­டம் வய­லுக்­குச் சென்­றா­லும் காவ­லர் உடன்­தான் செல்­கி­றேன். இந்­தப் பிரச்­சி­னைக்கு நல்ல தீர்வு ஏற்­பட வேண்­டும். மணல் கடத்­தல், கஞ்சா விற்­பனை ஒழிய வேண்­டும்.

“நானும் என் போன்ற பொது­மக்­களும் சுதந்­தி­ர­மாக நட­மாட வேண்­டும்,” என்று பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.

இந்த விவ­சாயி தொடுத்த வழக்­கு­களில் சில­வற்றை சிபி­சி­ஐடி அதி­கா­ரி­களும் விசா­ரித்து வரு­கி­றார்­கள்.

இவ­ரு­டைய சொந்த ஊரான முறப்­ப­நாடுக்கு அருகே உள்ள அக­ரம் என்ற கிரா­மத்­தில் சில நாள்­க­ளுக்கு முன் லூர்து பிரான்­சிஸ் என்ற கிராம நிர்­வாக அதி­கா­ரியை மணல் கடத்­தல்­காரர்­கள் அவ­ரு­டைய அலு­வ­ல­கத்­தி­லேயே வெட்டிக் கொன்­றது குறிப்­பி­டத்­தக்­கது.

இதன் காரணமாக பாலகிருஷ்ணன் மேலும் பயத்தில் வாழ்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!