தன்னைக் கடித்த எலியைக் கடித்துக் கொன்ற மாணவி!

தன் விரலைக் கடித்த சுண்டெலியைப் பழிதீர்க்கும் வகையில், இளம்பெண் ஒருவர் அதனையே கடித்துக் கொன்றுவிட்டார்.

இச்சம்பவம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நிகழ்ந்ததாக ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அந்த 18 வயது மாணவியின் விரலைச் சுண்டெலி ஒன்று கடித்துவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அம்மாணவி, தன் கைகளால் அச்சுண்டெலியைப் பிடித்து, அதன் தலையைக் கடித்தார். இதில் அவரது இரு பற்களின் தடம் அந்த எலிமீது பதிந்துவிட்டது.

சிறிது நேரத்தில் அச்சுண்டெலி இறந்துவிட்டது. அம்மாணவி தன் கைகளால் சுண்டெலியை இறுக்கிப் பிடித்ததால் அது மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே, பலமாகக் கடித்ததால் மாணவியின் உதட்டிலும் காயமேற்பட்டது. இதனையடுத்து, அவர் உரிய சிகிச்சை பெற்று, இப்போது நலமுடன் உள்ளார்.

இந்தச் சம்பவத்திற்காக அம்மாணவி வருந்துவதாகவும் சிகிச்சை பெற்றபோது தன் முகட்டைக் காட்ட வெட்கப்பட்டதாகவும் அவருடைய அறைத்தோழி கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!