பாதுகாப்பை வலுப்படுத்தும் மலேசியக் காற்பந்துக் குழுக்கள்

கோலாலம்பூர்: முதலில் மே 2ஆம் தேதி திரங்கானு காற்பந்துக் குழு விளையாட்டாளர் அக்யார் ரஷிட், தமது வீட்டுக்கு வெளியில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் காயமடைந்தார்.

மூன்று நாள்களுக்குப் பிறகு கோலாலம்பூரின் பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் உள்ள கடைத்தொகுதியில் இருந்தபோது சிலாங்கூர் காற்பந்துக் குழு விளையாட்டாளரும் மலேசிய நட்சத்திரக் காற்பந்து ஆட்டக்காரருமான ஃபைசல் ஹலிம் மீது அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆக அண்மையில் மே 7ஆம் தேதி ஜோகூர் பாருவில் ஜோகூர் டாருல் தக்சிம் ஆட்டக்காரர் சஃபிக் ரஹிமின் கார் கண்ணாடியை இரு ஆடவர்கள் உடைத்தனர்.

அந்த மூன்று சம்பவங்களும் மலேசியக் காற்பந்துத் துறையை ஆட்டங்காண வைத்துள்ளன. அதனால் காற்பந்துக் குழுக்கள் தங்கள் அதிகாரிகளின் பாதுகாப்பை வலுப்படுத்திவருகின்றன. தங்களின் ஆட்டக்காரர்களின் பாதுகாப்பு குறித்தும் அவை யோசித்துவருகின்றன.

அண்மைத் தாக்குதல்களினால், மே 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலேசிய சேரிட்டி ஷீல்டு காற்பந்தாட்டத்தில் களமிறங்கப்போவதில்லை என்று சிலாங்கூர் காற்பந்துக் குழு அறிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!