ஜப்பானின் முன்னாள் பிரதமர் ‌ஷின்சோ அபேக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு: இந்தியா

மாண்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ‌ஷின்சோ அபேக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய தெரிவித்துள்ளது. திரு அபே மீது இந்தியா கொண்டுள்ள மரியாதையை இது காட்டுவதாகக் கருதப்படுகிறது. தாம் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள இருதரப்பு உறவை மேம்படுத்தியவர் திரு அபே.

இருதரப்பு உறவுக்கு திரு அபே பெரும் பங்களித்ததாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்தச் சோகத்தை ஜப்பானியர்களுடம் இந்தியர்கள் பகிர்ந்துகொள்வதாக அவர் குறிப்பிட்டார். திரு அபேயை தம்முடைய உற்ற நண்பர் என திரு மோடி அடிக்கடி வருணித்துள்ளார். இருநாட்டு தலைவர்களும் கடைசியாக மே 24 அன்று இடம்பெற்ற குவாட் தலைவர்கள் கூட்டத்தில் சந்தித்தனர்.

திரு அபேயின் மறைவு குறித்து எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் தமது இரங்கலை தெரிவித்துகொண்டார். இருநாடுகளுக்கிடையே உள்ள உறவை வலுப்படுத்த திரு அபே முக்கிய பங்களித்ததாக அவர் டுவிட்டரில் குறிப்பிட்டார்.

திரு அபேயின் மரணம் தம்முடைய தனிப்பட்ட இழப்பு என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இந்த நாள் ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும், உலகிற்கும், எனக்கும் சோகமான நாள் என்று அவர் சொன்னார்.

தாம் பிரதமராக இருந்தபோது, இந்தியாவில் அதிவேக ரயிலை அறிமுகப்படுத்த திரு அபே முயற்சி செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!