காஸாவில் கூடுதலான மருத்துவமனைகள் இயங்கவில்லை

காஸா: காஸாவில் மேலும் இரு மருத்துவமனைகள் ஞாயிற்றுக்கிழமை புதிய நோயாளிகளை ஏற்க மறுத்துவிட்டன.

இஸ்ரேலியப் படையினரின் தொடர் தாக்குதலாலும் எரிபொருள், மருந்துப் பொருள்கள் தீர்ந்துவிட்டதாலும் கூடுதலான குழந்தைகள் உயிரிழக்கக்கூடும் என்று மருத்துவமனை ஊழியர்கள் எச்சரிக்கின்றனர்.

இஸ்ரேலியப் படையினர், வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளைச் சுற்றி முற்றுகையிட்டுள்ளனர். ஹமாஸ் போராளிகளை நோக்கி தான் படையெடுப்பதாகக் கூறிய இஸ்ரேல், மருத்துவமனைகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

காஸாவின் இரு பெரிய மருத்துவமனைகளாக அல் ஷிஃபா, அல் குட்ஸ் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகக் கூறின.

போரால் தினமும் கூடுதலானோர் கொல்லப்பட்டு, காயமடைந்துவரும் வேளையில், பாதியளவு மருத்துவமனைகள் இயங்காமல் போயுள்ளதால் காயமுற்றோருக்கு மருத்துவ வசதிகள் மிகவும் குறைந்துள்ளன.

இந்நிலையில், அல் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் உலக சுகாதார நிறுவனத்தால் தொடர்பை மீட்டெடுக்க முடிந்ததாக அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

காஸாவில் ஏற்கெனவே நிலவரம் இக்கட்டாக உள்ள வேளையில், தொடர் துப்பாக்கிச்சூடும் குண்டுவெடிப்பும் அங்கு நிலைமையைப் படுமோசமடையச் செய்துள்ளதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!