இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

துபாய்: இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய வானூர்தி வாயிலாக இஸ்ரேலுக்குச் சொந்தமான CMA CGM சைமி கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகக் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

இதில் இஸ்ரேலில் 1,400 பேரும் காஸாவில் 11,000 பேருக்கு மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர் காரணமாக மேற்கு ஆசிய வட்டாரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் இஸ்ரேலைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்கு சொந்தமான கொள்கலன் கப்பல் மீது சமீபத்தில் ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் உயரதிகாரி ஒருவர், “மால்டா கொடியுடன் அனைத்துலக கடற்பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது முக்கோண வடிவிலான குண்டுகளைச் சுமந்துச் செல்லும் ‘ஷாஹெட்-136’ ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது.

“இதில் கப்பல் சேதமடைந்தது; அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் நிலைமையைத் தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக நம்புவதற்கான காரணத்தை அந்த அதிகாரி விளக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!