இந்தோனீசியாவின் நிக்கல் ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18க்கு உயர்ந்துள்ளது

ஜகார்த்தா: கிழக்கு இந்தோனீசியாவில் சீன நிதியுதவியுடன் கூடிய நிக்கல் பதப்படுத்தும் ஆலையில் வார இறுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18க்கு உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களில் பலர்,  மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல்துறை அதிகாரி டிசம்பர் 26ஆம் தேதி அன்று தெரிவித்தார்.

மத்திய சுலாவேசி மாகாணத்தில் உள்ள மொரோவாலி தொழில் பூங்காவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் டிசம்பர் 23ஆம் தேதி காலையில் தொழிலாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இறந்தவர்கள் தீக்காயங்களால் பாதிக்கபட்டனர் என்றும் அவர்களுடைய உடல்களில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் மொரோவலி காவல்துறைத் தலைவர் சுப்ரியன்டோ கூறினார்.

இறந்தவர்களில் 8 பேர் வெளிநாட்டினர், 10 பேர் இந்தோனீசியர்கள் என்றும்  24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் ஆறு பேர் மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

பராமரிப்புக்காக மூடப்பட்ட உலையிலிருந்து எஞ்சியிருந்த கசடுகள் வெளியேறி, அந்த இடத்தைச் சுற்றிலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுடன் கலந்ததால் வெடிப்பு நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

தீ, டிசம்பர் 23ஆம் தேதி அன்று அணைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!