பாகிஸ்தானுக்கு $931 மில்லியன் கடன்

கராச்சி: அனைத்துலகப் பண நிதியத்தின் நிர்வாக வாரியம் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 700 மில்லியன் அமெரிக்க டாலர் (S$931 மில்லியன்) நிதியைக் கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

நிதியமும் பாகிஸ்தானின் நிதியமைச்சும் ஜனவரி 11ஆம் தேதி இதைத் தெரிவித்தன.

நிதிச் சிக்கலைத் தீர்ப்பதற்காக பாகிஸ்தான் கோரும் 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவித் திட்டத்தின்கீழ் இந்தத் தொகை வழங்கப்படும்.

இதன்மூலம் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் மொத்த உதவித் தொகை 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்பட்டது.

பாகிஸ்தானில் இப்போது பராமரிப்பு அரசாங்கம் பொறுப்பில் உள்ளது. கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் பெற்ற நிதியத்தின் கடனுதவித் திட்டம் அந்நாடு நிதிச்சிக்கலைத் தீர்த்துக்கொள்ள உதவியதாகக் கூறப்பட்டது.

ஆனால், அதற்குமுன் சில பொருளியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

ஜூலை மாதம் இணக்கம் கண்டதற்கு ஏற்ப பாகிஸ்தான் நடந்துகொள்கிறதா என்று மறுஆய்வு செய்ய நவம்பர் மாதம் நிதியத்தின் குழு பாகிஸ்தான் சென்றிருந்தது.

பாகிஸ்தான், நிதியத்திடம் ஒப்புக்கொண்டபடி, வரிகள் மூலம் 1.34 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியைத் திரட்டியதாகக் கூறப்பட்டது.

நிதியத்தின் ஒப்புதல் குறித்த தகவல் வெளியான பிறகு, ஜனவரி 11ஆம் தேதி பாகிஸ்தானின் அனைத்துலகப் பங்குபத்திரங்களின் மதிப்பு வெகுவாக உயர்ந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!