இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்குச் சொந்தமான பரிசுப்பொருள்களை அவர்கள் விற்றதற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாக இம்ரான் கானின் கட்சி ஜனவரி 31ஆம் தேதியன்று தெரிவித்தது.

சிறைத் தண்டனையுடன் அரசுப் பதவி வகிக்க இம்ரான் கானுக்குப் பத்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் புஷ்ரா பீபி கைது செய்யப்பட்டார்.

இம்ரான் கான் நாட்டின் ரகசியங்களை வெளியிட்டதாகக் கூறி ஜனவரி 30ஆம் தேதியன்று அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

“பாகிஸ்தானின் நீதித்துறை சீரழிந்துவிட்டது. குறுக்கு விசாரணைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தீர்ப்பு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த நியாயமற்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்,” என்று இம்ரான் கானின் ஊடகக் குழு கூறியது.

71 வயது இம்ரான் கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அது மறுத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!