பல மணிநேரம் காரில் விடப்பட்ட சிறுமி மரணம்

‌ஷா ஆலம்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட காரில் பல மணிநேரம் தவறுதலாக விடப்பட்ட ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.

‌ஷா ஆலம் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட காரில் அச்சிறுமியை அவரது தாய் தவறுதலாக விட்டுச்சென்றார். சிறுமியின் தாய் அம்மருத்துவமனையின் ஊழியர்.

ஜனவரி 30ஆம் தேதியன்று பிற்பகல் இரண்டு மணியளவில் தாய், சிறுமியை மழலையர் பராமரிப்பு நிலையத்திலிருந்து காரில் அழைத்து வந்தார்.

சிறுமி காரின் பின்னிருக்கையில் உறங்கிக்கொண்டிருந்தார். அதை மறந்துபோன தாய், காரின் இயந்திரத்தை அடைத்து நிறுத்திவிட்டுச் சென்றதாக காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

மாலை சுமார் ஆறு மணிக்குக் கணவர் தொலைபேசியில் அழைத்தபோதுதான் அந்த 34 வயது தாய்க்குத் தனது மகள் காரில் இருப்பது நினைவுக்கு வந்தது.

நினைவிழந்த நிலையில் இருந்த சிறுமி, ‌ஷா ஆலம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!