பேங்காக்: தாய்லாந்தின் பாரம்பரிய பூனை மற்றும் யானை வடிவங்களைக் கொண்ட தரமற்ற காற்சட்டைகள் அந்நாட்டுக்குள் வருவதை நடவடிக்கை எடுக்குமாறு சுங்கத் துறைக்கு தாய்லாந்தின் வர்த்தக அமைச்சர் பூம்தம் வெச்சயாச்சை அறிவுறுத்தியுள்ளார்.
சீனாவிலிருந்து வரும் பூனை மற்றும் யானை வடிவங்கள் அச்சடிக்கப்பட்ட காற்சட்டைகள் சரியான பதிப்புரிமை பெற்ற வடிவங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவை மிகவும் தரம் குறைந்தவையாக உள்ளன என்றும் திரு பூம்தம் கூறினார்.
“எனவே, சீனாவிலிருந்து வரும் இந்தத் தரம் குறைந்த தயாரிப்புகளிலிருந்து அசல் தயாரிப்புகளைப் பாதுகாக்க பதிப்புரிமைச் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை நான் கண்டறிய வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.