75% வாக்குகளுடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பிரபோவோ

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு சிங்கப்பூர் நேரப்படி பிப்ரவரி 14ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து, வாக்குச் சீட்டுகளை எண்ணும் பணிகள் தொடங்கின.

சிங்கப்பூர் நேரப்படி இரவு ஒன்பது மணி நிலவரப்படி மாதிரி வாக்கு எண்ணிக்கையில் திரு பிரபோவோ சுபியாந்தோ ஏறத்தாழ 75 விழுக்காடு வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் அனீஸ் பஸ்வேடன் சராசரியாக 23 விழுக்காட்டுக்கும் 26 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் முன்னாள் மத்திய ஜாவா ஆளுநர் கஞ்சார் பிரனோவோ சராசரியாக 16 விழுக்காட்டுக்கும் 17 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் இருந்ததாக மாலை 5.30 மணியளவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தோனீசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதுமட்டுமல்லாது, இந்தோனீசியாவில் 38 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 19 மாநிலங்களில் குறைந்தது 20 விழுக்காடுகளைப் பெற வேண்டும்.

அவ்வாறு நிகழாவிட்டால், ஆக அதிக வாக்குகளைப் பெறும் இரண்டு வேட்பாளர்கள் ஜூன் மாதத்தில் மீண்டும் போட்டியிட வேண்டும். மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!