படகு கவிழ்ந்ததில் 50 பேர் உயிரிழப்பு

பங்குயி: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகர் பங்குயில் உள்ள ஓர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட 50 பேர் மாண்டனர்.

அவர்கள் அனைவரும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்னொரு கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்த அவர்களுக்கு அப்படகுப் பயணம் இறுதிப் பயணமாக அமைந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சம்பவம் ஏப்ரல் 19ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

ஆற்றிலிருந்து 50 சடலங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தேடுதல் பணி தொடர்வதாக அதிகாரிகள் கூறினர்.

படகில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!