சீனாவில் விரைவுச்சாலை சரிந்ததில் குறைந்தது 24 பேர் மரணம்

பெய்ஜிங்: தென்சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையின் ஒரு பகுதி சரிந்தது.

இதில் குறைந்தது 24 மரணமடைந்துள்ளதாக அம்மாநில ஊடகத் தகவல்கள் மே 1ஆம் தேதி தெரிவித்தன.

மெய்சு நகர், டாபு கவுண்டிக்கு இடையிலான சாலை அதிகாலை 2.10 மணிக்கு சரிந்ததாக சிசிடிவி எனப்படும் மாநில ஊடகம் தகவல் வெளியிட்டது. இதில் 18 வாகனங்கள் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது பற்றிக் கூறும் சிசிடிவி ஊடகத் தகவல், “காலை 11.45 மணிக்கு 19 பேர் மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 30 பேருக்கு மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று விளக்கமளித்தது. இதில் மருத்துவமனை சிகிச்சை பெறுவோரின் உயிருக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்று கூறியது. ஆனால், அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து சிசிடிவி ஊடகம் விவரம் வெளியிடவில்லை.

விபத்து குறித்து சமூக ஊடகங்களில் வெளியான படங்கள், வாகனங்கள் வீழ்ந்த ஆழமான பாதாளப் பகுதியிலிருந்து கிளம்பிய தீ, புகையைக் காட்டின.

இதன் தொடர்பில் வெளியான மற்ற படங்கள், தூரத்தில் அவசர வாகனங்கள் வருவதை காணச் சிலர் கூடியதைக் காட்டுவதாக இருந்தது.

விபத்து காரணமாக பொதுப் பாதுகாப்பு, அவசரநிலையை கையாளுதல், தீயணைப்புப் பிரிவு, சுரங்கப் பாதையில் சிக்கியிருப்போரை மீட்கும் பிரிவு என கிட்டத்தட்ட 500 பேர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிசிடிவி ஊடகம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!