கி.ஜனார்த்தனன்

உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் ‘முத்துச்சிதறல்’ நிகழ்ச்சி, நான்காவது முறையாக நடந்தேறியுள்ளது.
ஹாலந்து வில்லேஜில் லோரோங் லிப்புட் சாலையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வந்த ‘தம்பி’ சஞ்சிகைக் கடை, ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 5) இரவு 9.20 அளவில் தனது கதவுகளை இழுத்து மூடியது.
ஒன்றோடு ஒன்று மோதிய பட்டிமன்ற அணிகளின் சொல்வீச்சுக்கு இடையிலும் நண்பர்களாகவும் தமிழ் ஆர்வலர்களாகவும் இருக்கும் அதன் பங்கேற்பாளர்களின் மொழிகளில் குதூகலமும் கொண்டாட்ட உணர்வும் நிரம்பின.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் வாழ்க்கையையும் புகழையும் கொண்டாடும் விதமாக ‘மண்டலா கிளப்’ கலாசார மையம், அவரது சிற்பங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது.
இயற்கையின் அழகை உணர்ந்து இசையமைக்கும் ஜப்பானிய இசைக் கலைஞர் கித்தாரோ, இயற்கையிலிருந்து தொடர்ந்து இசையைக் கற்று வருவதாகக் கூறுகிறார்.
எந்தக் குறிப்புகளையும் பார்க்காமல் கவிதைகளை மனனம் செய்து கித்தார் இசையுடன் 10 கவிஞர்கள் வாசித்த கவிப்பெருக்கு நிகழ்ச்சி ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடைபெற்றது.
சிங்கப்பூரின் சஞ்சிகை விரும்பிகள் ஆவலுடன் பல்லாண்டுகளாக நாடிவந்த ‘தம்பி’ சஞ்சிகைக் கடை, ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்குப் பிறகு தனது செயல்பாடுகளை நிறுத்தவுள்ளது.
பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான அரசாங்கம், ஊழியர்களின் தேவைகளையும் அக்கறைகளையும் கையாண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) தலைவர் கே.தனலெட்சுமி பாராட்டியுள்ளார்.
சிங்கப்பூர் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் செய்தியாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 40 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய புகழ்பெற்ற தமிழ் ஆளுமை செ.ப.பன்னீர்செல்வத்திற்கு கவிமாலை அமைப்பின் ‘கணையாழி’ விருது வழங்கி கௌர­விக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆர்வமும் போட்டித்தன்மையும்மிக்க நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குறுகியகாலத்தில் செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) கூறுகளைக் கற்று, காணொளி தயாரிக்கும் போட்டி ஒன்றில் குழுக்களாகப் பொருதினர்.