பாலிவுட் நாயகி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றர் தம்பதியர்.
ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட அபிஷேக் விரலில் திருமண மோதிரம் இல்லை என்பதை ஒரு காரணமாக வைத்து இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தன.
பதிலடி கொடுக்கும் விதமாக குடும்பத்துடன் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் தம்பதியினர்.
அபிஷேக்கின் அக்கா ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்திய நந்தா அறிமுகமாகும் ‘த ஆர்ச்சிஸ்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் அவர்கள் ஒன்றாக கலந்துகொண்டனர்.