நீருக்குப் பதில் சத்தத்தில் இருந்து உருவாகும் பேய்

‘ஈரம்’ படத்தில் தண்ணீரில் இருந்து பேய் உருவாகும். ‘சப்தம்’ படத்தில் சத்தத்தில் இருந்து பேய் உருவாகும் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.

ஆதியுடன் நந்தா நடித்த ‘ஈரம்’, நகுல் நடித்த ‘வல்லினம்’, அருள்நிதி நடித்த ‘ஆறாது சினம்’, அருண் விஜய் நடித்த ‘குற்றம் 23’, ‘பார்டர்’ ஆகிய திரைப்படங்களையும் அருண் விஜய் நடித்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையத் தொடரையும் இயக்கியவர், அறிவழகன்.

தற்போது அவர் மீண்டும் ஆதி, இசை அமைப்பாளர் தமன் ஆகியோருடன் இணைந்துள்ள படம், ‘சப்தம்’.

இப்படத்தின் முதல் சுவரொட்டியை அண்மையில் ஆதியின் பிறந்தநாளையொட்டி வெளியிட்டனர். படம் குறித்து இயக்குநர் அறிவழகன் பேசியபோது, “ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக நானும், தமனும் இணைந்துள்ளோம். ஆதிக்கு மனைவியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

“மூணாறு, மும்பை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இதே பெயரில் படத்தை திரையிடுகிறோம்.

பேய் புலனாய்வாளர் கதாபாத்திரத்தில் ஆதி நடித்துள்ளார். இவ்வுலகில் ஆவி இருக்கிறதா, இல்லையா என்பதை அறிவியல் ரீதியாக அணுகும் கதை இது,” என்றார் அறிவழகன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!