வரலட்சுமி நடித்துள்ள ‘சபரி’ என்ற புதிய படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. நாயகியை முன்னிலைப்படுத்தும் இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், மதுநந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கோபிசுந்தர் இசையமைத்துள்ளார்.
“இப்படம் வரும் மே 3 ஆம் தேதி வெளியாகிறது. பெரிய கொலைகாரக் கும்பலிடம் இருந்து தன் மகளைக் காப்பாற்ற ஒரு தாய் படும்பாடுகளை இப்படம் விவரிக்கிறது. இது போன்ற மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பது சிறந்த அனுபவங்களைத் தரும். இதில் பரிதவிப்புக்கு ஆளாகும் தாயாக நடித்துள்ளேன்,” என்கிறார் வரலட்சுமி.