திரிஷாவும் சிம்புவும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள்.
சிம்புவும், திரிஷாவும் இணைந்து நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 25 முதல் தொடங்க உள்ளது. செல்வராகவன் இயக்கும் இப்படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்குப் பின் சிம்புவும் திரிஷாவும் மீண்டும் ஜோடி சேருகின்றனர்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் மிக அழகான காதலை திரையில் வெளிக்கொண்டு வந்திருப்பார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் இணையும் இந்தப் படமும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு மென்மையான காதல் கதை என இயக்குநரின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக தேர்தலுக்குப் பின் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா நீண்ட இடைவெளிக்கு பின்பு ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஒளிப்பதிவு மது அம்பட். இரண்டாம் உலகம் வெற்றிக்குப் பின் செல்வராகவனின் இப்புதிய படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.