வீட்டிலிருந்த சிறுமியைக் கவ்விச் சென்ற சிறுத்தை

இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நான்கு வயதுக் குழந்தையின் உடல் கண்டெடுப்பு

உதம்பூர்: தன் வீட்டிலிருந்த நான்கு வயதுச் சிறுமியைச் சிறுத்தை ஒன்று கவ்விச் சென்று கொன்ற சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டம், அப்பர் பஞ்சலா எனும் சிற்றூரில் சனிக்கிழமை இரவு 7-8 மணிக்குள் இச்சம்பவம் நிகழ்ந்தது.

தனு என்ற அக்குழந்தையின் உடல், அவ்வூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கிடந்ததை உள்ளூர்வாசிகள் கண்டனர்.

“சிறுமியைச் சிறுத்தைக் கவ்விச் சென்றதாகத் தகவல் கிடைத்ததும் எம் குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆயினும், குழந்தையின் உயிரற்ற உடலையே கண்டுபிடிக்க முடிந்தது,” என்று உதம்பூர் வனத்துறை அதிகாரி ராகேஷ் சர்மா கூறினார்.

அத்துடன், சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் மாண்ட குழந்தையின் குடும்பத்தினர்க்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், விடிகாலையிலும் அந்திப் பொழுதிலும் தனியே வெளியே செல்ல வேண்டாம் என்றும் சிறுத்தை போன்ற கொடிய விலங்குகள் பதுங்கியிருக்கும் அபாயமுள்ளது என்றும் பொதுமக்களுக்குத் திரு ராகேஷ் எச்சரித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!