சீக்கியர் ஆர்ப்பாட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருங்கவலை

டொரோன்டோ: இந்தியாவுக்கு எதிராக கனடாவில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பெருங்கவலை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டுக்கு இடையே அவர்கள் சந்தித்ததாக இந்தியா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டது.

கனடாவில் உள்ள சீக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பான விவகாரம் இந்தியாவில் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்துவந்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்வலத்தை கடந்த ஜூன் மாதம் அனுமதித்ததற்காக புதுடெல்லி கனடாவைச் சாடியது.

“அவர்கள் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார்கள். இந்திய அரசதந்திரிகளுக்கு எதிராக வன்முறையைக் கிளப்புகிறார்கள். அரசதந்திர வளாகங்களைச் சேதப்படுத்துகிறார்கள். கனடாவில் உள்ள இந்திய சமூகத்தினரையும் தாங்கள் பிரார்த்தனை செய்யும் இடங்களையும் மிரட்டுகிறார்கள்,” என்று இந்திய அறிக்கை தெரிவித்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. செப்டம்பரில் இந்தியாவுடன் நடைபெறவேண்டியிருந்த வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையை ஒட்டாவா நிறுத்திவைத்தது.

ஜி20 மாநாட்டின்போது பல உலகத் தலைவர்களுடன் இருதரப்புக் கூட்டங்களை நடத்திய திரு மோடி திரு ட்ரூடோவுடன் கூட்டம் நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!