கடனுக்கு பரோட்டா தராததால் உணவில் மண்ணைப் போட்ட ஆடவர்

கொல்லம்: உணவக உரிமையாளர் கடனுக்கு உணவு தர மறுத்துவிட்டதால், ஆத்திரத்தில் ஆடவர் ஒருவர் அவ்வுணவகத்திலிருந்த உணவுப்பொருள்களில் மண்ணைப் போட்டார்.

இதனையடுத்து, அனந்து என்ற அந்த ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது.

இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

அனந்து குற்றப் பின்னணி கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை அங்குள்ள அக்‌ஷரா உணவகத்திற்குச் சென்ற அனந்து, பத்து பரோட்டாவும் மாட்டிறைச்சிக் குழம்பும் கட்டித் தருமாறு கேட்டார்.

கடைக்காரரும் உணவுப்பொட்டலங்களைக் கட்டியபின், அனந்துவிடம் அதற்கான பணத்தைத் தரும்படி கேட்டார். அப்போது, பின்னர் காசு தரும்படி அனந்து கூறினார். ஆனால், கடைக்காரரோ காசில்லாமல் தர முடியாது எனக் கூறிவிட்டார்.

இதனால் சினமடைந்த அனந்து, கடையில் பரோட்டாவிற்காகப் பிசைந்து வைக்கப்பட்டிருந்த மைதா மாவிலும் மற்ற உணவுப்பொருள்களிலும் மண்ணைக் கொட்டியதாக மாத்ருபூமி செய்தி தெரிவிக்கிறது.

அத்துடன், கடையிலிருந்த பாத்திரங்களை எல்லாம் தூக்கி வீசிய அவர், குழம்பையும் சாலையில் கொட்டினார்.

மேலும், கடைக்காரரை அனந்து இழிவாகப் பேசியதுடன் அவரைத் தாக்கியதாகவும் சொல்லப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!