கடப்பிதழ் மோசடி: 50 இடங்களில் சோதனை; 24 பேர்மீது வழக்கு

கோல்கத்தா: போலியான ஆவணங்களின் அடிப்படையில் கடப்பிதழ்கள் வழங்குவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 50 இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, 24 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிக்கிம் மாநிலத் தலைநகர் கேங்டாக்கில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரும் இடைத்தரகர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்தது.

போலியான ஆவணங்களின் அடிப்படையில் வெளிநாட்டவர் உட்பட தகுதியில்லாதவர்களுக்குக் கடப்பிதழ் வழங்கப்படுவதாக சிபிஐக்குத் தகவல் கிடைத்தது.

அதனையடுத்து, கோல்கத்தா, சிலிகுரி, கேங்டாக் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

அவற்றின் தொடர்பில் 16 அதிகாரிகள் உட்பட 24 பேர்மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

முன்னதாக, இருபது ஆண்டுகளுக்குமுன் போலிக் கடப்பிதழ்கள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.

அவர்களிடமிருந்து ஆறு போலிக் கடப்பிதழ்களும், மூன்று விசா ஒட்டுவில்லைகளும், சவூதி அரேபியத் தூதரகத்தின் ஐந்து முத்திரைகளும் கடந்த 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!