அலிகர்: அயோத்தி ராமர் கோயில் 2024 ஜனவரியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயிலுக்கு நன்கொடையாக பலவித பொருள்களை அளிக்க ஏராளமான பக்தர்கள் முன்வந்துள்ளதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அலிகர் நகரில் உள்ள பூட்டு தயாரிக்கும் மூத்த கலைஞர் சத்ய பிரகாஷ் சர்மா என்பவர் ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்க கையால் செய்யப்பட்ட உலகின் ஆகப் பெரிய பூட்டு ஒன்றை தயாரித்துள்ளார்.
இதன் உயரம் 10 அடி; அகலம் 4.5 அடி; தடிமன் 9.5 அங்குலம்; எடை 400 கிலோ. இந்தப் பூட்டுக்குரிய சாவியின் நீளம் 4 அடி.
இந்தப் பூட்டைத் தயாரிக்க ரூ.2 லட்சம் செலவானது. எனது வாழ்நாள் சேமிப்பை எல்லாம் செலவு செய்து இதனைத் தயாரித்துள்ளேன்,” என்று சத்ய பிரகாஷ் சர்மா கூறினார்.