அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட ஒன்பது பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்பு

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட ஒன்பது பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்தது.

இதற்கான தேர்தல் அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்நிலையில் இவர்கள் மீண்டும் எம்.பி.க்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக எம்.பி.க்கள் நாகேந்திர ராய், கேசரிதேவ்சிங் திக்விஜய் சிங் ஜாலா, பாபுபாய் ஜேசங்பாய் தேசாய், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் சிக் பராய்க், சமிருல் இஸ்லாம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு 2வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மாநிலங்களவை எம்.பி.யாக நான் பதவியேற்பதில் பெருமையடைகிறேன். நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வாய்ப்பளித்த குஜராத் மக்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு நன்றி,’’ எனக் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!