மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் பரிசோதனைத் திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்

புதுடெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் முதல்கட்டப் பரிசோதனைத் திட்டத்தை இஸ்ரோ அக்டோபர் மாதம் தொடங்குகிறது.

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா -எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது.

மூன்றாவது சாதனை முயற்சியாக, விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக உள்ளது. அதன்படி முதல் பரிசோதனை திட்டத்தை இஸ்ரோ மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தின் தொடக்கமாக இரண்டு ராக்கெட்டுகளில் ஆளில்லா விண்கலம் அனுப்பிப் பரிசோதிக்கப்படும்.

அடுத்ததாக, பூமியிலிருந்து 300 முதல் 400 கி.மீ தூரத்தில் உள்ள புவியின் கீழடுக்குச் சுற்றுவட்டப் பாதையில் விண்வெளி வீரர்கள் சில நாள்கள் சுற்றிவிட்டு திரும்பும் வகையில் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ககன்யான் திட்டத்துக்கான பலகட்டப் பரிசோதனைகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!