புதுடெல்லி: ஜி20 மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்தில், மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் காணொளியை மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்தக் காணொளி ஒரு மில்லியனுக்கு அதிகமான முறைகள் பார்க்கப்பட்டுள்ளன.
அந்தக் காணொளிக்குப் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்த மண்டபம் கிட்டத்தட்ட ரூ.2,700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.