புதுடெல்லி: புதுடெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்களின் மனைவியர்க்கு, இந்திய கலாசார அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், அவர்களுக்குச் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. ஜெய்ப்பூர் இல்லத்தில் அளிக்கப்பட்ட அந்த சிறப்பு விருந்தில் தினை உணவுகள் வழங்கப்பட்டதாகவும், தெருவில் விற்கப்படும் சில உணவுகளை அவர்கள் ருசி பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சிறப்பு விருந்தில் துருக்கி, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மொரீசியஸ் நாட்டின் முதல் பெண்மணிகள் கலந்துகொண்டனர்.