புதுடெல்லி: கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுப் பொருள்கள் வங்கக் கடலில் இருக்கிறதா என ஆய்வு செய்ய ‘சமுத்திரயான்’ திட்டத்தை செயல்படுத்த தேசிய கடல் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.
சந்திரயான்-3, ஆதித்யா எல்1 ஆகிய விண்கலங்களை இஸ்ரோ சமீபத்தில் வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்தது. அந்த வகையில், ஆழ்கடல் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசியக் கடல் தொழில்நுட்பக் கழகம் (என்ஐஓடி) ‘சமுத்திரயான்’ திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு ‘மத்ஸ்யா 6000’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுவரும் இதில் 3 மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ், ஹைட்ரோதெர்மல் சல்பைடு மற்றும் காஸ் ஹைட்ரேட்ஸ் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் வங்கக் கடலின் ஆழ்பகுதியில் இருக்கிறதா என ஆய்வு செய்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.