யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் ஹொய்சாலா கோவில்கள்

புதுடெல்லி: உலக பாரம்பரியப் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஹொய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் பேலூர், ஹளபேடு, சோமநாத்புரம் ஆகியவற்றின் ஹொய்சாலா கோவில்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இதனால் இந்தியாவில் உள்ள மொத்தம் 42 தலங்கள் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலங்கள் என்ற நிலையை எட்டி உள்ளன.

யுனெஸ்கோ எக்ஸ் தளத்தில் இது தொடர்பான தகவலைத் தெரிவித்து உள்ளது.

“இந்தியாவில் உள்ள ஹொய்சாலா கோவில்கள் யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன, வாழ்த்துகள்,” என அது தெரிவித்துள்ளது.

இதனிடையே, யுனெஸ்கோவின் அந்த அறிவிப்பை எக்ஸ் சமூக ஊடகத்தில் வரவேற்றுள்ள இந்தியப் பிரதமர் பிரதமர் மோடி இந்தியாவுக்கு மேலும் அதிக பெருமை கிடைத்துள்ளது என்றார்.

“யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் பிரமிக்கச் செய்யும் புனிதத் தோற்றம் கொண்ட ஹொய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

“அழகுநிறைந்த, சிக்கலான கலை அம்சங்களைக் கொண்ட ஹொய்சாலா கோவில்கள் இந்தியாவின் கலாசார பாரம்பரிய செறிவுக்கான தக்க சான்றாக உள்ளன.

“நம் முன்னோர்களின் தனிச்சிறப்புடனான கைவினைத் திறனை அவை விளக்குகின்றன,” என்று மோடி தெரிவித்துள்ளார்.

அண்மையில் யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!