மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இப்போது மேலும் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் குழந்தைகள்.

செப்டம்பர் 30ம் முதல் அக்டோபர் 1 வரை பிறந்து 3 நாட்களுக்குள் 12 குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனையின் தலைவர் ஷியாம் ராவ் வகோடே கூறியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கவலை தெரிவித்துள்ளார். இது பெரிய வலியையும் வேதனையையும் கவலையையும் தந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தானே நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. குறுகிய காலத்தில் 18 நோயாளிகள் உயிரிழந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!