டெல்லியின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு

புதுடெல்லி: டெல்லியின் பல்வேறு இடங்களில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

அதிர்வு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நில அதிர்வுகள் காரணமாக டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டது.

டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்துகுஷ் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.

நேப்பாளத்தில் 25 நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டன.

முதலில் 4.6 ரிக்டர் அளவிலும் பின் 6.2 ரிக்டர் அளவிலும் நில நடுக்கங்கள் பதிவாகின.

அதன் பின்னர் மீண்டும் இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டன.

மூன்றாவது நில நடுக்கம் 3.6 ரிக்டர் அளவிலும் நான்காவது 3.1 ரிக்டர் அளவிலும் பதிவாகின.

அருணாச்சலப் பிரதேசத்தில் பிற்பகல் 3.27 மணிக்கு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

உயிர் சேதம், பொருள் சேதம் பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!